Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

J.Durai
திங்கள், 17 ஜூன் 2024 (13:24 IST)
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. 
 
சிவகங்கை ஈத்கா திடலில் சிவகங்கை நகரில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 
 
இந்த சிறப்பு தொழுகையில் பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் இன்று காலை 6- 45 மணிக்கு துவங்கிய இந்த சிறப்பு நிகழ்வு 8 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்குப் பின்னால் நபி இப்ராஹிம்  அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதனுடைய இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு  பங்கிட்டு கொடுக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 
இஸ்லாமியரின் சிறப்பு தொழுகையை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments