Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவருக்கு ஜாமின்! பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (12:59 IST)
தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பீகார் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது மதுரை ஹைகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. வடமாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வேலை செய்து வரும் நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் உமாராவ் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் 15 நாட்கள் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் ஜாமீன் பெற்ற பிரசாந்த் உமாராவ் தூத்துக்குடியில் தங்கியிருக்க வேண்டும் என்றும் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி இனி இது போன்ற வதந்தி வீடியோ செய்திகளை பரப்ப மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments