Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்ட்ஸ் தம்பதியின் குழந்தை ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை: பெண் புரோக்கர் கைது

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:28 IST)
திருச்சி அருகே எச்ஐவி பாதித்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்றை ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொடுத்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த எய்ட்ஸ் பாதித்த ஒரு தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை விற்பதற்கு அந்த தம்பதியினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து அந்தோணியம்மாள் என்ற புரோக்கரை அணுகிய அந்த தம்பதியினர் ரூபாய் 1 லட்சத்து 35 ரூபாய்க்கு குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றனர். 
 
குழந்தையை வாங்கிய தம்பதியினர்களுக்கு பத்திரத்தில் எழுதி கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் குழந்தையை விற்றுக்கொடுதத்தற்கு அந்தோணியம்மால் இரு தரப்பிலும் கமிஷன் பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் எய்ட்ஸ் பாதித்த தம்பதியினரின் உறவினர் ஒருவர் கொடுத்த ரகசிய புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் உடனடியாக அந்தோணியம்மாள் கைது செய்து விசாரணை செய்தபோது அவர் குழந்தை வாங்கி கொடுத்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையை விற்ற, வாங்கிய தம்பதிகளையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதேபோல் வேறு யாருக்கும் குழந்தையை அந்தோணியம்மால் விற்பனை செய்ய உதவினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments