Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புறநகர் ரெயிலில் பெண்கள் பெட்டியில் அனாதையாக இருந்த குழந்தை: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (11:53 IST)
சென்னை புறநகர் ரயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் அனாதையாக பெண் குழந்தை ஒன்று இருந்ததை அடுத்து அந்த குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். 
 
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் கேட்பாரற்று ஒரு குழந்தை இருப்பதை போலீசாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர் 
 
இதனையடுத்து அந்தப் பெட்டியில் சென்று பார்த்த ரயில்வே போலீசார் குழந்தை ஒன்று அனாதையாக இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த குழந்தையை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்
 
மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு அந்த குழந்தை தற்போது செங்கல்பட்டில் உள்ள காப்பகத்தில் உள்ளதாக தெரிகிறது. சென்னை மின்சார ரயிலில் குழந்தையை அனாதையாக தவிக்க விட்டுச்சென்ற பெற்றோர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments