Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் கருணாநிதிக்கு சிலை: அனுமதி கேட்டு அழகிரி மனு

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (18:34 IST)
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் அமைதிபேரணி நடத்திய மு.க.அழகிரி அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.அழகிரி தனது கடிதத்தில் 'நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் வெண்கல சிலை அமைக்க வழங்கி உதவிட வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments