Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வர்த்தகத்தை, ஆட்சேபித்து விழிப்புணர்வு!

J.Durai
புதன், 22 மே 2024 (16:26 IST)
மதுரை யானைமலை ஒத்தக்கடையில், வணிகர் நலச் சங்கம் பேரவையின் 41-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து  இரட்டை மாட்டு வண்டி பந்தய விழிப்புணர்வு நடைபெற்றது.
 
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு, பொதுச் செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். தலைவர் ரகுபதி, பொருளாளர் முனீஸ்வரன், துணைத் தலைவர் துரைராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
இந்த போட்டியில், 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
இந்த போட்டி, திருமோகூர் சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே தொடங்கி, திருவாதவூர் வரை எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
 
பந்தயத்தில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளில் பூட்டிய காளைகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின.
 
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண, ஒத்தக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்தனர். 
 
இதில், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். போட்டியின்போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க யானைமலை ஒத்தக்கடை  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments