Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ஹாயாக ஆட்டோவில் கஞ்சா கடத்திய நபர் கைது

சென்னையில் ஹாயாக ஆட்டோவில் கஞ்சா கடத்திய நபர் கைது
, செவ்வாய், 2 ஜூன் 2015 (14:27 IST)
சென்னையில், ஆட்டோவில் கஞ்சா கடத்திய நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
 
சென்னை, சூளைமேடு பெரியார் பாதை வழியாக ஒரு ஆட்டோவில், கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து, உஷாரான தி.நகர் துணை ஆணையர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் செல்லும் ஆட்டோக்களை எல்லாம் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
 
அப்போது, பாரிமுனையில் இருந்து போரூர் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் சுமார் 3 கிலோவுக்கும் அதிகமான அளவில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
 
இதனையடுத்து, அந்த ஆட்டோவை ஓட்டிவந்த மணிகண்டன் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதை மணிகண்டன் ஒப்புக்கொண்டார். மேலும், அவரிடம் இருந்த 3 கிலோவுக்கு மேல் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
 
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பரபரப்பான சாலையில், ஆட்டோவில் கஞ்சா கடத்தியது பலரையும் கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil