Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியையிடம் ஆட்டோ ஓட்டுநர் வழிப்பறி

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (04:36 IST)
சென்னை சேத்துப்பட்டில், ஆட்டோவில் பயணித்த கல்லூரிப் பேராசிரியையிடம், ஓட்டுநர் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 
சூளைமேட்டைச் சேர்ந்தவர் குணசுந்தரி (34). இவர் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்கு அங்குள்ள ஒரு ஆட்டோவில் குணசுந்தரி ஏறினார்.
 
கீழ்ப்பாக்கம் பச்சையப்பா விடுதி சாலையில் ஆட்டோ வந்தபோது, ஓட்டுநர் ஆட்டோவை திடீரென நிறுத்தி, குணசுந்தரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
 
இதுகுறித்து குணசுந்தரி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments