Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்: ஆதம்பாக்கத்தில் பரபரப்பு

நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்: ஆதம்பாக்கத்தில் பரபரப்பு
, திங்கள், 17 அக்டோபர் 2016 (12:00 IST)
ஆதம்பாக்கத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சென்னை கிண்டி மசூதி காலனியைச் சேர்ந்த அசார் (30) என்பவர் ஆதம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் அசார் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து எதிரில் உள்ள கடைக்கு சென்றபோது, 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அசாரை தாக்க தொடங்கியது. இதனால் பதறி அடித்து ஓடிய அவரை அந்த கும்பல் ஓடஓட விரட்டி நடுரோட்டில் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அசாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்காக அமைச்சர் நடத்தப்பட்ட யாகத்தில் பெண் மரணம்