Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் ஆட்டோ ஓட்டுநரை கதறக் கதற குத்திக் கொலை செய்த கும்பல்

மதுரையில் ஆட்டோ ஓட்டுநரை கதறக் கதற குத்திக் கொலை செய்த கும்பல்
, வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (10:24 IST)
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் 5 பேர் கும்பல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை குத்திக் கொலை செய்துள்ளது.

 

 
மதுரை மாவட்டம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் பாலமுருகன்.
 
இவர் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
 
அப்போது அவர் வழக்கமாக தனது ஆட்டோவை நிறுத்தும் இடத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நின்றுள்ளார்.
 
இந்நிலையில், அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை சுற்றி வளைத்துக் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளது.
 
இந்த தாக்குதலால், பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
 
இந்த கொலை சம்பவம் குறித்த தகவலறிந்த கரிமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச்  சென்று பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
ஆட்டோ சவாரி ஏற்றிச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து  காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil