Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேர் ஆட்டோவில் சில்மிஷம் : ஆட்டோ டிரைவரை அடித்த சிறுமி

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (15:31 IST)
சமீப காலமாகவே பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அதிகரித்து வருவது வாடிகையாகிவிட்டது, இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது தன் கையில்  வைத்திருந்த பரீட்ச்சை அட்டையால் அட்டையால் அடித்து தப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த இரண்டு சிறுமிகள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களை பள்ளிக்குத் தினமும் அழைத்து செல்ல ஷேர் ஆட்டோவில் வருபவர் விஜயகுமார். 
 
சம்பவத்தன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தன் அக்காவுக்கு 12 வது பொதுத்தேர்வு என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார்.
 
தனியாக வந்த மாணவியை ஷேர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விஜயகுமார், சிறுமியின் அருகில் அமர்ந்துள்ளார். ஆட்டோவை அவரது நண்பர் ஓட்டியுள்ளார். விஜயகுமார் மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தன் கையில் வைத்திருந்த தேர்வு அட்டையால் விஜயகுமாரை தாக்கியதுடன் பலத்த சப்தமிட்டுள்ளார்.விஜயகுமார் அதன் பிறகு ஆட்டோவில் இருந்து ஓடி விட்டார். அவரது நண்பர் சிறுமியை வீட்டில் இறக்கிவிட்டு ஆட்டோவில் விரைந்து சென்றுள்ளார்.
 
பின்னர் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தை அடுத்து  போலிஸார் விஜயகுமாரை கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்