Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேர் ஆட்டோவில் சில்மிஷம் : ஆட்டோ டிரைவரை அடித்த சிறுமி

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (15:31 IST)
சமீப காலமாகவே பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அதிகரித்து வருவது வாடிகையாகிவிட்டது, இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது தன் கையில்  வைத்திருந்த பரீட்ச்சை அட்டையால் அட்டையால் அடித்து தப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த இரண்டு சிறுமிகள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களை பள்ளிக்குத் தினமும் அழைத்து செல்ல ஷேர் ஆட்டோவில் வருபவர் விஜயகுமார். 
 
சம்பவத்தன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தன் அக்காவுக்கு 12 வது பொதுத்தேர்வு என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார்.
 
தனியாக வந்த மாணவியை ஷேர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விஜயகுமார், சிறுமியின் அருகில் அமர்ந்துள்ளார். ஆட்டோவை அவரது நண்பர் ஓட்டியுள்ளார். விஜயகுமார் மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தன் கையில் வைத்திருந்த தேர்வு அட்டையால் விஜயகுமாரை தாக்கியதுடன் பலத்த சப்தமிட்டுள்ளார்.விஜயகுமார் அதன் பிறகு ஆட்டோவில் இருந்து ஓடி விட்டார். அவரது நண்பர் சிறுமியை வீட்டில் இறக்கிவிட்டு ஆட்டோவில் விரைந்து சென்றுள்ளார்.
 
பின்னர் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தை அடுத்து  போலிஸார் விஜயகுமாரை கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீங்கள் உண்மையிலேயே இந்தியரா? ராகுல் காந்தியிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

ஏங்ங்க.. ஊரே வெள்ளக்காடு.. ஜாலியா டைவ போடு! சப்இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி! - நெட்டிசன்கள் கண்டனம்!

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்