Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 31ம் தேதி வரை வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2015 (04:40 IST)
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
மாத ஊதியம் பெறுவர்கள், தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள 80 வயதுக்கு உட்பட்டவர்களும், ரீபண்ட் கோருபவர்களும் ஆன்லைனில் வருமான வரி கணக்கு ரிட்டன் தாக்கல் செய்யலாம்.
 
ஆன்லைன் மூலமாகவோ அல்லது படிவத்திலோ வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.
 
இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில், வருமான வரி அலுவலகங்கள் அமைந்துள்ள ஆயக்கர் பவன் வளாகத்தில் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
சென்னை பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவன் வளாகத்திலும், தாம்பரம் பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் தாம்பரம் ஆயக்கர் சேவை கேந்திராவிலும் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என கூறப்படுள்ளது.  
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments