ஆகஸ்ட் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்.. உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு..!

Siva
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (16:47 IST)
ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அன்றைய தினம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவு வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க படுவதில்லை.

ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் ஆக.31-ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும். அன்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் தம்பி.. சின்ன தம்பி.. அவர் ஒரு ஜீரோ!.. தமிழிசை சவுந்தரராஜன் நக்கல்..

காருக்கு வரி கட்டாதவர் ஊழல் பத்தி பேசுகிறார்!. விஜயை பொளக்கும் கருணாஸ்!...

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.4 லட்சத்தை நெருங்கியது வெள்ளி விலை..!

விஜய் கட்சியில் காளியம்மாள்? இன்னும் சில பிரபலங்கள்.. சூடு பிடிக்குது தேர்தல் களம்..!

துணிஞ்சு முடிவெடுங்க ராகுல் காந்தி? 25 தொகுதி வாங்கி 18 தொகுதி ஜெயிச்சு என்ன பயன்? காங்கிரஸ் தொண்டர்கள் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments