Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணத்தில் விநாயகர் கோவிலை இடிக்க முயற்சி.. அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம்..!

Siva
வியாழன், 3 ஜூலை 2025 (14:07 IST)
கும்பகோணம் குப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோவிலை இடிக்க அதிகாரிகள் முயற்சி செய்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் அதை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், குப்பங்குளத்தில் உள்ள விநாயகர் கோவிலும் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி, அதை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் முயற்சி செய்தனர்.
 
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்து, "கோவில் இருக்கும் இடம் நீர்நிலையில் இல்லை. மீண்டும் அளவீடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தை மீண்டும் அளவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments