Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்...

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:55 IST)
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சிலர்  நேற்று அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கடற்கரையில் இருந்து சுமமார் 10 கிமீ தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது,  புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் அப்பகுதிக்கு வந்தனர்.

அப்போது, தமிழக மீனவர்கள் மீது பைப்புகள், மரத்தடிகள் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தமிழக மீனவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டதால்தான் அடிப்பதாகக் கூறியுள்ளனர். இதில், எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற மீனவர்கள் 3 க்கும் மேற்ப்பட்ட பைபர் படகுகளில் சென்று பாதிக்கப்பட்டவர்களை கரைக்கு மீட்டு வந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments