Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (09:18 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக கூடாரமே ஆடிப்போய் இருக்கிறது. இந்நிலையில் கோவையில் தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் இமாலய வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிசாமி தலைமையிலான மனுசூதனன் தோல்வி அடைந்தார். அதிமுக அணியில் இருக்கும் சிலர் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து   அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் சிலரை கட்சி பதவியிலிருந்தும், சிலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினர்.
இதனையடுத்து கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த தினகரன் ஆதரவாளரான மணியன், ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும் முதல்வர் அணியில் இருக்கும் சிலருக்கு அது பிடிக்காமல் தனது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி, தனது மனைவியையும் அடித்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளதாக மணியன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments