Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மங்காத்தா பட பாணியில் பணத்தை கொள்ளையடிக்க நினைத்த கும்பல்

மங்காத்தா பட பாணியில் பணத்தை கொள்ளையடிக்க நினைத்த கும்பல்
, புதன், 23 நவம்பர் 2016 (11:29 IST)
மும்பையில் ஏடிஎம்-மில் பணம் நிரப்புவதற்காக சென்ற வேனை மறித்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
 
 
நாடு முழுவதிலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் பணம் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பணப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது.
 
சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் புதிய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடிக்க முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் மும்பையில் ஏடிஎம்-மில் பணம் நிரப்புவதற்காக சென்ற வேனை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
 
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்து அவர்கள் தப்பியோடினர். சினிமா பட பாணியில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலாளியின் மனைவியுடன் கள்ளக்காதலால் மனைவியை கொன்ற கொடூரன்!