Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாதகத்தில் உள்ள கண்டத்தை கடந்த ஜெயலலிதா வீடு திரும்ப நாளாகும்: ஜோதிடர் கணிப்பு!

ஜாதகத்தில் உள்ள கண்டத்தை கடந்த ஜெயலலிதா வீடு திரும்ப நாளாகும்: ஜோதிடர் கணிப்பு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (15:54 IST)
கடந்த 1 மாத காலமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை முன்பு இருந்ததைவிட நல்ல முன்னேற்றமடைந்துள்ளது. இதனையடுத்து அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்ற கேள்வி பரவலாக பேசப்படுகிறது.


 
 
முதல்வர் ஜெயலலிதா இந்த தீபாவளியை போயஸ் கார்டனில் கொண்டாடுவார் எனவும், தீபாவளி முடிந்து தான் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் செல்வார் எனவும் மாற்றி மாற்றி செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் அப்பல்லோவில் முதல்வரை கவனித்து வரும் சசிகலாவை பிரபல ஜோதிடர்கள் சந்தித்ததாக செய்திகள் வருகின்றன.
 
கார்டனுக்கு அடிக்கடி வருகை தரும் இந்த ஜோதிடர்கள் சசிகலா உடன் அதிக நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் கிரக சூழல்களைக் கொண்டு பார்க்கும்போது, அவர் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்று பதவியேற்றபோது குறித்துக் கொடுத்த நேரம் சரியில்லையாம்.
 
அதனால் தான் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். அந்தக் கண்டத்தை ஜெயலலிதா இப்போது தாண்டிவிட்டார். உடல்நிலை குறித்த எதிர்மறை தகவல்கள் வெளியானதும், ஒருவகையில் நல்லதுதானாம். கிரக சூழல்களின் அடிப்படையில் தான் அவர் இவ்வளவு நாள் கார்டனில் இருக்க முடியவில்லையாம்.
 
மேலும் முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 14 அல்லது 16-ஆம் தேதிகளில் ஒரு நல்ல நேரத்தில் கார்டனுக்குத் திரும்ப வேண்டும் என ஜோதிடர்கள் சசிகலாவிடம் கூறியதாகவும், இதனால் சசிகலா சந்தோஷமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments