Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தால் சென்னை ஸ்தம்பிக்கும்: வேலூர் ஜோதிடர் கணிப்பு!!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (13:03 IST)
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு அதிகமான சூறாவளி காற்று மற்றும் மழையால் தமிழகம் முழுவதும் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஓகி புயலால் கன்னியாகுமரி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு மீண்டும் ஒரு புயல் ஆபாயம் நிலவி வருகிறது. 
 
பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு, தமிழகத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும், ஆறுகளில் வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு உறை பனி வீசும் என்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், விமான விபத்து ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும், சென்னையில் மின்கசிவு ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும், டிசம்பர் 9 முதல் 12 வரை சென்னையில் கனமழை பெய்யும், நகரம் வெள்ளத்தில் மிதக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர், கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு இருந்தது. அதே போல புயல் வெள்ளத்தால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
எனவே, முன்னர் கூறியது நடந்ததால், அடுத்தடுத்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments