Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் ! முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (19:13 IST)
நெல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது/. இ ந் நிலையில், நிவாரணம் உதவி மற்றும் அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
திருநெல்வேலியை அடுத்த பழவூர் கிராமத்தில் நடிபெற்ற கோயில் திருவிழாவிற்கு போலீஸார் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. அதில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவும் இருந்தார். இந்நிலையில் திருவிழா அன்று இரவு ஆறுமுகம் என்பவர் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 

ஆம், கடந்த மாதம் தனக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்ற்வே ஆறுமுகம் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை கழுத்தில் அறுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்படது.

பின்னர் உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆறுமுகத்தை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியின்போது  தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரேட் தெரசாவுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் உதவி மற்றும் அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவலர்களை தங்களை தற்காத்துக் கொள்ள புதிய யுக்திகள் கையாளுதற்கு பயிற்சி அளிக்க  வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments