Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போதை மருந்து விற்பனை.. சினிமா உதவி இயக்குனர் அதிரடி கைது..!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (07:11 IST)
சென்னையில் போதை மருந்து விற்பனை செய்த சினிமா உதவி இயக்குனர் அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதிரடியாக ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தது மட்டுமன்றி, அவரிடம் 30 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து அவரை விசாரணை செய்தபோது, அவர் ஒரு சினிமா உதவி இயக்குனர் என்றும், 25 வயதான ஸ்ரீதர்சன் என்ற பெயரை உடையவர் என்றும் தெரியவந்தது.

இதனை அடுத்து, தர்சனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும், அவர் யாரிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வாங்குகிறார், யாருக்கு விற்கிறார் என்பது குறித்து விசாரணையில் சில முக்கிய விஷயங்கள் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments