Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக முன்னாள் அமைச்சர் கே..பி.முனுசாமி மீது சொத்து அபகரிப்பு புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே..பி.முனுசாமி மீது சொத்து அபகரிப்பு புகார்
, புதன், 2 செப்டம்பர் 2015 (23:10 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது ரூ. 17 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அதிமுக முன்னாள் அமைச்சர் கே..பி.முனுசாமி அபகரித்துக் கொண்டதாக புகார் அளித்துள்ளார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்,  சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவர் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில்,  அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, தனக்கு சொந்தமான ரூ. 17 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக புகார் மனுவில் கூறியிருந்தார்.
 
மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் என்றும், இது குறித்து,  முதல்வர் பிரிவு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லைலை என அந்த மனுவில் கூறியுள்ளார்.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மீது பெண் ஒருவர், கவர்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil