Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (12:53 IST)
சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.


 


இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொருப்பாளர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.
 
இதைத் தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறினார்.
 
மேலும், "தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல.
 
வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுகவே முடிவு செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பபாக இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments