Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவயதில் ராமாயணம் , மகாபாரதம் படித்து வளர்ந்தேன் - அமெரிக்க முன்னாள் அதிபர்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:03 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது அரசியல் நினைவுகள் குறித்து வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் தனது நினைவுகள் குறித்து அதில் எழுதியுள்ளார்.

சமீபத்தில் கூட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் குறித்து தனது அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தனது சுயசரிதையில் இந்தியாவைக் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், உலக மக்கள் தொகையில் சுமார் ஆறில் ஒரு பகுதி மக்கள் வாழும் நாடுஇது. அங்கு 2 ஆயிரத்துக்கும் மேலான இனக்குழுக்கம் உள்ளது. 700 மேற்பட்ட மொழிகள் உள்ள நாடு இந்தியா. இருந்ததது நான் அதிபராகி இந்தியா வருவதற்கு முன் இந்தியாவைப் பற்றி எனக்கு சிறப்பாக கற்பனை இருந்தது.

நான் சிறு வயதில் இந்தோனேஷியாவில் வசித்தபோது, இந்துகளின் ராமாயணம் , மகாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள்தான் எனக்கு பருப்பு , கீமா சமைப்பதைக் கற்றுக் கொடுத்தனர். எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments