Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளும் மீட்பு

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:22 IST)
சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் அந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் இந்த வங்கியில் அடமானம் வைத்திருந்த பொதுமக்களின் நகைகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது
 
இந்த நிலையில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் பணியாற்றிய முருகன் என்பவர் தலைமையில் தான் இந்த கொள்ளை நடந்துள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்
 
அதனை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதும் முதல் கட்டமாக 28 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அடுத்தடுத்து நடந்த கைதுகள் மற்றும் மீட் நடவடிக்கையால் தற்போது கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்டதாகவும் உரிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் அந்த நகைகளை வங்கியில் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments