நாளை பிளஸ் 2 ரிசல்ட்.. நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம்..!

Siva
ஞாயிறு, 5 மே 2024 (16:40 IST)
காலை 9 மணிக்கு பிளஸ் டூ ரிசல்ட் வர இருக்கும் நிலையில் நாளை முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் அடுத்ததாக கல்லூரிகளில் சேர தயாராகி வரும் நிலையில் நாளை ரிசல்ட் வெளிவர உள்ளது. நாளை காலை ரிசல்ட் வந்தவுடன் மாணவர்கள் எந்த கல்லூரிகளில் சேரலாம் என்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என்ற நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் http://tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரிசல்ட் பார்த்த ஒரு சில மணி நேரம் மணி நேரங்களிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் மருத்துவம் போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments