Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை தடை செய்யலைனா நபிகளை கிண்டல் பண்ணுவேன்! – ஓவியர் சுரேந்திர குமார் கைது!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (10:58 IST)
முகமது நபியை கிண்டல் செய்து சித்திரம் வெளியிடுவதாக பதிவிட்ட ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் மதரீதியான மோதல்கள், வாக்குவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுளர்கள் குறித்த கதைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிலர் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகி வந்தது.

இந்நிலையில் அந்த சர்ச்சையின் போது தனது ட்விட்டரில் பதிவிட்ட ஓவியர் சுரேந்திர குமார், குறிப்பிட்ட அந்த யூட்யூப் சேனலில் பின்னணியில் இஸ்லாமிய அமைப்புகள் இருந்து செயல்படுவதாக குற்றம் சாட்டியதோடு, அந்த வீடியோவை தடை செய்யாத நிலையில் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்யும் வகையில் கார்ட்டூனை வெளியிடுவதாகவும் பதிவிட்டிருந்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்லாமிய அமைப்புகள் சில அளித்த புகாரின் பேரில் ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மேலும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments