Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காய்கறிக்குள் மறைத்து வைத்து கஞ்சா விற்றவர்கள் கைது

காய்கறிக்குள் மறைத்து வைத்து கஞ்சா விற்றவர்கள் கைது
, திங்கள், 5 அக்டோபர் 2015 (15:24 IST)
நெல்லை கொக்கிர குளம் ஆற்றுபாலம் அருகே காய்கறிக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 
நெல்லை கோட்டாட்சியர் பெர்மி வித்யாவுக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அதில் நெல்லை ஆட்சியர் அலுவலக வாயில் அருகே உள்ள தள்ளுவண்டியில் காய்கறிக்குள் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்களை மறைத்து விற்பதாக கூறப்பட்டிருந்தது.
 
இதையடுத்து கோட்டாட்சியர் பெர்மி வித்யா மற்றும் தாசில்தார் கிறிஸ்டோபர் மற்றும் காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய தள்ளுவண்டி காய்கறிக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
 
அப்போது காய்கறிகளைக் கீறிப் பார்த்த போது அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காய்கறி வியாபாரியான நெல்லை கைலாசபுரத்தை சேர்ந்த இசக்கி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பாளை சமாதானபுரத்தை சேர்ந்த முத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil