Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று கைதானவர் இன்று உயிரிழப்பு: அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

Siva
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (16:47 IST)
நேற்று கைதாகி விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அற்புதராஜ் மரணம் இன்று உயிரிழந்ததால் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்ததை அடுத்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு அற்புதராஜை நேற்று போலீசார் கைது செய்தனர். கைதுக்கு பின் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு விழுப்புரம் கிளை சிறையில் அற்புதராஜ் அடைக்கப்பட்டார்.

சிறையில் சக கைதிகளுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்த அற்புதராஜ், இன்று காலை 6 மணிக்கு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே அற்புதராஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அற்புதராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் தான் அவரை அடித்து கொலை செய்திருப்பார்கள் என்று கூறியுள்ள அவரது உறவினர்கள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்றும் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments