Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை! பரோலிலாவது விடுங்கள்: அற்புதம்மாள் கெஞ்சல்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (05:20 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய கடந்த பல வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் அவருடைய தாயார் அற்புதம்மாள். ஆனால் அவருக்கு இதுவரை கிடைத்ததோ ஏமாற்றம்தான்.



 
 
தனது மகனின் இளமை வாழ்க்கை முழுவதுமே சிறையில் கழிந்துவிட்டதாக கூறும் அற்புதம்மால் விடுதலை செய்யாவிட்டாலும், பரோலிலாவது விடுங்கள் என்று தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தபோது, சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து பரோலில் விடுவது குறித்த ஆலோசனை செய்யப்படும் என்று கூறினாராம். இதுகுறித்து அற்புதம்மாள் கூறியபோது, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மகனை விடுதலை செய்வேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். அந்த வாக்கை தற்போதைய முதல்வர் காப்பாற்றவேண்டும்." என்றார் கலங்கிய கண்களோடு கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

இதுதான் ரோடு போட்ட லட்சணமா? பல்லிளித்த NH-66 சாலையின் முக்கிய பகுதி.. NHAI அதிரடி நடவடிக்கை..!

டிரம்ப் தான் அமெரிக்க அதிபர், ஆனால் அவர் போட்ட சட்டை நெதன்யாகுடையது: சிவசேனா கிண்டல்..!

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments