விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு! அர்ஜுன் சம்பத் மீதான வழக்கில் தீர்ப்பு..!

Siva
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:02 IST)
விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு கொடுப்பதாக அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அது குறித்து பதிவு ஆன வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி முத்துராமலிங்கத் தேவரை விமர்சித்தார் என்று கூறப்பட்ட நிலையில் அது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.

இது பெரும் சர்ச்சை ஆன நிலையில் இதுகுறித்து விஜய் சேதுபதி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பில் அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு 4 ஆயிரம் ரூபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments