தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்: அர்ஜூன் சம்பத்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (20:02 IST)
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என அர்ஜுன் சம்பத் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நிறுவுதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கு இந்து மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டாஸ்மாக் கடைகளில் எந்தவிதமான தனிமனித இடைவெளியும் இன்றி இயங்கி கொண்டிருக்கும் நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடத்துவதில் என்ன தவறு என்ற கேள்வி பாஜக தரப்பினர் எழுப்பினர் 
 
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் தடையை மீறி தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்படும் என அர்ஜுன் சம்பத் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments