Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி -அரியலூர் மாவட்டத்தில் ஒரு வாரம் கடையடைப்பு!

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (17:52 IST)
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகமாகி வரும் நிலையில் நாளை முதல் ஒரு வாரம் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால் இங்கு முதலில் கொரோனா பரவ ஆரம்பித்தது. அதன் பின்னர் ஓரளவு கட்டுக்குள் இருந்த பாதிப்பு இப்போது அதிகமாக ஆரம்பித்துள்ளது.

இதனால் இப்போது ஒருவாரம் கடைகளை அடைக்க அரியலூர் மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். நாளை முதல் ஒரு வாரத்துக்கு இந்த கடையடைப்பு செயல்பட இருக்கிறது.  இதில் பால்கடைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை அரியலூரில் மொத்தமாக 497 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 459 பேர் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் 38 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments