ஊரடங்கு நீட்டிப்பு...திரையரங்குகள் செயல்பட அனுமதி !

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (18:05 IST)
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து  அரசு உத்தரவிட்டுள்ளது.  50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கப்பட்டது.
.
அதில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி சுழற்சி முறையில் வகுப்புகளை தொடங்கவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி எனவும், பூங்காக்கள்,நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதாகவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
மேலும், அனைத்துக் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி எனவும், பள்ளிகளில் 9,10,11, 12, ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், இரவு 9 மணிவரை செயல்பட்டு வந்த கடைகள் இனி இரவு 10 மணி வரை செயல்படலாம் எனவும், கேள்விக்கஈ விடுதிகள், தங்குகள் விடுதிகள், மதுக்கூட்டங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments