Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவல்: சென்னையில் இன்றும் உயர்வு

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (18:31 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் எதிர்பார்த்ததை விட அதிகரித்து வரும் நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 28 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சென்னையை அடுத்து இன்று  மதுரையில் 15 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விருதுநகரில் 7 பேர்களும், விழுப்புரம் மற்றும் நாமக்கல்லில் தலா 4 பேர்களும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து தமிழகத்தில் சென்னையில் 523 பேர்களும், கோவையில் 141 பேர்களும், திருப்பூரில் 112 பேர்கலூம், திண்டுக்கல்லில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களூம், மதுரையில் 75 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments