ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னையில் மிகப் பெரி அளவில், தேர்தல் பிரச்சார மாநாடு நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில், மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகளுக்கு 110 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 124 தொகுதிகளும் பிரிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் கட்சி சட்டதிட்டப்படி கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அவர் போட்டியிடவில்லை. அதேபோல, கூட்டணியை வலுப்படுத்தவும், வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கவும் நான் முடிவு செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக சார்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை பிரம்மாண்ட பிரச்சார மாநாடு நடைபெறுகிறது. இதில் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து, மதுரை விமான நிலையத்தில் வைகோ கூறுகையில், மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக சார்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை பிரம்மாண்ட பிரச்சார மாநாடு நடைபெறுகிறது என்றார்.