Webdunia - Bharat's app for daily news and videos

Install App

₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு தந்த தூய்மை பணியாளர்களுக்கு மாமன்ற கூட்டத்தில் பாராட்டு!

J.Durai
வெள்ளி, 26 ஜூலை 2024 (17:51 IST)
கோவை மாநகராட்சி, கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார்.
 
இந்நிலையில், கடந்த மாதம் சிவகாமி தனது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 பவுன் தங்க செயினை தவறுதலாக குப்பைகளோடு குப்பையாய் கொடுத்துள்ளார். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளான சிவகாமி, இந்த சம்பவம் குறித்து தனது நண்பர் சக்திவேலிடம் தெரிவித்துள்ளார்.
 
சக்திவேல், குறிச்சி பகுதி 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் கவுன்சிலர் உதயகுமார், உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கான துப்புரவு மேற்பார்வையாளர் மணிகண்டனை தொடர்பு கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பேரில், குப்பை வண்டியில் ஏற்றப்பட்டிருந்த டன் கணக்கான குப்பைகளை கீழே இறக்கி, ஆறு மணி நேர தீவிர தேடுதலுக்கு பின் தவறவிடப்பட்ட 6 பவுன் தங்க செயின் மீட்கப்பட்டுள்ளது.
 
இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட, ராணி, சத்யா சாவித்திரி ஆகிய தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
 
இது குறித்து 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் கூறுகையில்.....
 
நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் மாமன்ற கூட்டத்தில், அவர்களது பெயர்கள் கூறப்பட்டு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களாலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments