Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை கோவில் விவகாரம்; குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு

Arun Prasath
திங்கள், 27 ஜனவரி 2020 (12:50 IST)
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து குடமுழுக்கு செய்வதில் விவகாரம் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு நடத்த தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பல தமிழ் அமைப்புகள் போராடி வருகின்றனர். ஆனால் ஆண்டாண்டுகாலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், புராதான தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை எனவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு தாக்கல் செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments