Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் : அப்பல்லோ நிர்வாகம் அறிவிப்பு

முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் : அப்பல்லோ நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (20:01 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக, சென்னை அப்பல்லோ நிர்வாகம் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.       
 
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
அதேபோல், ஒருபக்கம் அவரது உடல்நிலை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது. இந்த விவகாரம் அதிமுக விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து, சில கூடுதல் தகவல்களுடன், அப்பல்லோ நிர்வாகம் இன்று மாலை ஒரு அறிக்கை வெளியிடும் என்று கூறப்பட்டது. அதன்படி வெளியான அறிக்கையில் “முதல்வர் நலமுடன் இருக்கிறார். அவர் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளும், கிருமி தொற்றுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். சிறந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்னும் சில நாட்கள் அவர் இங்கு தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை அறிவிப்பு..!

6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்.. நர்ஸிங் மாணவி கூறிய தவறான தகவல்..!

டிஸ்சார்ஜ் ஆன துரை தயாநிதி அமெரிக்கா செல்ல ஏற்பாடு.. உயர் சிகிச்சை அளிக்க முடிவா?

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதி அறிவிப்பு..!

கைது செய்வதற்கு உரிய காரணங்கள் முறையாக இல்லை: மோகன் ஜிக்கு ஜாமீன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments