Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2015 (08:22 IST)
காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாத்மாகாந்தி கொல்லப்பட்டு 66 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவரை படுகொலை செய்த கோட்சேவை போற்றுகிற செயலில் வகுப்புவாத அமைப்புகள் திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய சக்திகளை தோலுரித்துக்காட்டுகிற வகையில் காந்தியடிகளின் நினைவு நாளான 30 ஆம் தேதி தேசப்பிதாவை நன்றியோடு நாட்டு மக்கள் நினைவு கூறி அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவின் அடையாளமாக கருதப்படுகிற மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவரை இழிவுபடுத்துகிற சக்திகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக்களுக்கும் இருக்கிறது.

இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. நமது தேசிய அடையாளங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கிற தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதை ஒரு தேசிய கடமையாக ஒவ்வொரு மக்களுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments