Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
, வியாழன், 29 ஜனவரி 2015 (08:22 IST)
காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாத்மாகாந்தி கொல்லப்பட்டு 66 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவரை படுகொலை செய்த கோட்சேவை போற்றுகிற செயலில் வகுப்புவாத அமைப்புகள் திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய சக்திகளை தோலுரித்துக்காட்டுகிற வகையில் காந்தியடிகளின் நினைவு நாளான 30 ஆம் தேதி தேசப்பிதாவை நன்றியோடு நாட்டு மக்கள் நினைவு கூறி அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவின் அடையாளமாக கருதப்படுகிற மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவரை இழிவுபடுத்துகிற சக்திகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக்களுக்கும் இருக்கிறது.

இதை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. நமது தேசிய அடையாளங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கிற தேசவிரோத சக்திகளை இனம் கண்டு வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதை ஒரு தேசிய கடமையாக ஒவ்வொரு மக்களுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil