எம் ஜி ஆர் ஜெயலலிதா போல கட்சியை நடத்துவோம்… மீண்டும் ஒரு சசிகலா ஆடியோ!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (07:54 IST)
சசிகலா வரிசையான முன்னாள் அதிமுக நிர்வாகிகளிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் கட்சியை காப்பாற்றா தான் வருவதாய் சசிகலா பேசியுள்ளதாக வெளியாகியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது போல ஒரு ஆடியோவில் அழுது புலம்பிய தொண்டரிடம் தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில் திருச்சியை சேர்ந்த அதிமுக நிர்வாகி அருள்ஜோதி என்பவர் மீண்டும் சசிகலா அதிமுகவுக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை வைக்க, அதற்கு சசிகலா ‘நிச்சயம் வருவேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை நடத்துவோம். கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாகி விடும்’ என நம்பிக்கை அளித்துப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments