Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி, நூலகங்களுக்கு 455 கோடி நிதி ஒதுக்கீடு! – ஆண்டு பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (11:03 IST)
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிக்கல்வி மற்றும் நூலக மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

அதில் பள்ளிக்கல்வி மற்றும் நூலக மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடியும், தமிழகம் முழுவதும் முன்மாதிரி பள்ளிகள் தொடங்க ரூ.125 கோடியும், புதிய நூலகங்கள் அமைக்க ரூ.125 கோடியும், வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்குமுறை இலக்கிய திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றம் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments