Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கார் வெடிப்பு சம்பவம்: அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (17:07 IST)
கோவை கார் வெடிப்பு சம்பவம்: அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை!
கோவை கார் வெடிகுண்டு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் கார் வெடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த சம்பவம் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுகுறித்து கூறிய போது கோவை கார் வெடி சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை எதையோ மூடி மறைக்கின்றனர் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்
 
மேலும் இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்றும் உளவுத்துறையை மாற்றுவதும் மாற்றாததும் முதல்வர் விருப்பம் என்றாலும் உளவுத்துறை தோல்வி என்பதை நான் உறுதியாக சொல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments