Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கிட்ட ஆடு தான் இருக்கு, ரூ.500 கோடிக்கு எங்கே போவேன்: அண்ணாமலை டுவிட்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (07:59 IST)
பிஜிஆர் என்ற நிறுவனம் ரூபாய் 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தன்னிடம் சில ஆடுகள் மட்டுமே இருப்பதாகவும் 500 கோடி தன்னிடம் இல்லை என்றும் டுவிட்டரில் பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்சாரத் துறையில் நடந்த ஊழல் குறித்து பேசி வருகிறார் என்பதும் இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மின்சார துறையில் நடந்த ஊழலுக்கு பிஜிஆர் என்ற நிறுவனம் உடந்தை என்ற ரீதியில் அண்ணாமலை டுவிட்டை பதிவு செய்ததற்கு இழப்பீடு கேட்டு ரூபாய் 100 கோடி கேட்டு பிஜிஆர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு பதில் அளித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
 
சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! அறிவாலயம் அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது! சந்திப்போம்! என்று பதிவு செய்துள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments