Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கை மூடினால் ரூ.1 லட்சம் கோடி வருமானத்திற்கு வழி சொல்கிறேன்: அண்ணாமலை

Annamalai
Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (10:56 IST)
டாஸ்மாக் மது கடைகளை மூடினால் ஒரு லட்சம் கோடி வருமானத்திற்கு நான் வழி சொல்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மீண்டும் தென்னை மரம் பனைமரம் கள்ளு ஆகியவற்றை கொண்டு வாருங்கள். ஜூன் 14ஆம் தேதி மாநில அரசுக்கு நாங்கள் தயாரித்து உள்ள வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் கூறினார். 
 
அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பனைமரம் தென்னை மரத்தின் வாயிலாக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது எப்படி என்பதை சுட்டிக்காட்டி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
டாஸ்மாக் மூலம் கிடைக்கும் 44 ஆயிரம் கோடி வருமானம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த காலத்திலும் திமுக டாஸ்மாக் கடைகளை மூடாது என்றும் பெயரளவில் 100 கடைகளை மூடி விடுவதால் எந்த விதமான பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments