Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம்: அண்ணாமலை பேட்டி..!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (12:00 IST)
தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொத்து பட்டியலை வெளியிட்டபோது அதில் டிஆர் பாலு மற்றும் அவரது மகன் சொத்து பட்டியலையும் குறிப்பிட்டு இருந்தார்
 
இதனை அடுத்து டிஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் இன்று அண்ணாமலை ஆஜர் ஆனார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் அண்ணாமலை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இதனை அடுத்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது என்றும் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments