Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லூர் ராஜூ நல்ல வார்த்தைகள் பேசினால் அன்று மழை வந்துவிடும்: அண்ணாமலை

Siva
வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:55 IST)
செல்லூர் ராஜு எப்போதும் ஆபாசமாக தான் பேசுவார், அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்துவிட்டால் அன்று மழை வந்துவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடந்த சில மாதங்களாக அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் படுமோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலை குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செல்லூர் ராஜுவின் அநாகரீகமான பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்லூர் ராஜு வாயிலிருந்து ஆபாசமான வார்த்தைகள் வருவது இயல்பான ஒன்றுதான், அவர் நல்ல வார்த்தைகள் பேசினால் அன்று மழை வந்துவிடும்

மக்களிடம் அதிமுக காணாமல் போய்வரும் நிலையில் இது போன்ற பேச்சுக்கள் தேவையில்லாதது என்று கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு செல்லூர் ராஜு என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ALSO READ: வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட தயாராக இருந்தோம்: அன்புமணி ராமதாஸ்


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments