பெரியார் சிலை அகற்றுவது குறித்து அண்ணாமலை புதிய விளக்கம்..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (13:22 IST)
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை அகற்றுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்துடன் கூடிய கருத்து தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில்  பெரியார் சிலை அகற்றுவது குறித்து தற்போது அண்ணாமலை புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவிலுக்கு எதிரே உள்ள தொகுதி பெரியார் சிலையை எடுத்து அதை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய கௌரவத்துடன் வைப்போம் என்று கூறியுள்ளார்.

பெரியாரின் கருத்துக்கள் பொது இடத்தில் இருக்கலாம். ஆனால் கோவில் அருகே இருக்கக்கூடாது. ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்று தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments