Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி பற்றி பேச கனிமொழிக்கு தகுதி கிடையாது: அண்ணாமலை ஆவேசம்

Siva
வெள்ளி, 8 மார்ச் 2024 (16:12 IST)
திமுக எம்பி கனிமொழிக்கு பிரதமர் குறித்து பேச எந்தவித தகுதியும் இல்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இடம் பிரதமர் குறித்து திமுக எம்பி கனிமொழி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அண்ணாமலை ’கனிமொழி தனது தந்தை கட்டிய வீட்டில் தான் தங்கியிருக்கிறார், அவர் ஏதாவது உழைத்து சம்பாதித்துள்ளாரா? சொந்தமாக காடு மேட்டில் வேலை செய்து விவசாயம் செய்து இதுவரை சம்பாதித்து உள்ளாரா? இல்லை..

 கருணாநிதி மகள் என்ற பெயரில் ஓசியில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, அப்பா பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழி, பிரதமர் பற்றி விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர், கருணாநிதி என்ற வார்த்தையை தூக்கி விட்டால் கனிமொழி யார்? அவர் இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்

முன்னதாக கனிமொழி மதத்தை வைத்து பிளவு படுத்தி மத்திய அரசு மக்களை பிரிக்க முயற்சிக்கிறது என்றும் மணிபூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்றும் ஆனால் தமிழகத்திற்கு மட்டும் தேர்தல் காரணமாக அடிக்கடி வருகிறார் என்றும் கூறியிருந்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments